மட்டக்களப்பு பொதுச்சந்தையில் உயிர்வாயு ஆலை உருவாக்கத்திற்கான அடிக்கல் வைப்பு…

மட்டக்களப்பு பொதுச்சந்தையில் உயிர்வாயு ஆலை உருவாக்கத்திற்கான அடிக்கல் வைப்பு…




மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் ஐக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டம் என்பவற்றின் இணை செயற்படுத்தல் மூலம் மட்டக்களப்பு பொதுச் சந்தையில் உயிர்வாயு ஆலை உருவாக்கும் செயற்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (17) மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவான், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பிரதி ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 1.7 மில்லியன் மற்றும் ஐக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் 3.3 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.