திருப்பெருந்துறையில் மஞ்சல்கோட்டில் விபத்து –ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறை சந்தியில் நேற்று இரவு மஞ்சள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று இரவு திருப்பெருந்துறை சந்தியில் உள்ள மஞ்சள் கடவையினை கடக்க முயன்றவர் மீது தனியார் பஸ் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தினை தொடர்ந்து அங்கு நின்ற பொதுமக்களுக்கள் தனியார் பஸ் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில் அங்குவந்த பொலிஸார் நிலமையினை கட்டுப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டனர்.

வேகமாக வந்த தனியார் பஸ் மஞ்சல் கடவை ஊடாக துவிச்சக்கர வண்டியை உறுட்டிக்கொண்டு கடக்க முற்பட்டவர் மீதே மோதியதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது படுகாயமடைந்த இருதயபுரத்தினை சேர்ந்த சகாயநாதன்(62வயது)என்பவர் ஆபத்தான நிலமையில் அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவரின் நிலமை ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் தனியார் பஸ்சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பஸ்சும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.