துறைநீலாவணை பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம் நாளை.

(சசி துறையூர்)
துறைநீலாவணை மகாவித்தியாலய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை 12.08.2018 காலை 09.00 மணியளவில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் பாடசாலை அதிபர்
T, ஈஸ்பரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

மிக நீண்ட காலத்திற்கு பின்னர் துறைநீலாவணை மகாவித்தியாலய பாடசாலைக்கென அண்மையில் பழையமாணவர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நாளை நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் செயல் தலைவர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், பழைய மாணவர் சங்கத்திற்கென புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

மேலும் சங்கத்திற்கென யாப்பு வரைதல் மற்றும் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.