மரியாள் பேராலய பங்கு கலாசார மண்டபம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது .


(லியோன்)

புளியந்தீவு  புனித மரியாள் பேராலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பங்கு கலாசார மண்டபம் பங்கு மக்கள் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது
.

மட்டக்களப்பு புளியந்தீவு  புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் பங்கு மக்களின் தேவை கருதி ஆலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பங்கு கலாசார மண்டபம் மக்கள் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது .

பங்கு தந்தை சி வி .அன்னதாஸ் தலைமையில் பங்குமக்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட பங்கு கலாசார மண்டபம் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகையினால் ஆசீர் வதிக்கப்பட்டு திறந்து வைத்தார்

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் , பங்கு மக்கள் கலந்துகொண்டனர்