புளியந்தீவு புனித மரியாள் பேராலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.


 .(லியோன்)


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழைமை வாய்ந்த கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு  புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை
   தலைமையில்  பங்குதந்தை சி வி.அன்னதாஸ் , அருட்தந்தை .மகிமைதாஸ் , அருட்தந்தை  கிறைடன் அவுட்ஸ் கோன் , இந்தியாவில் இருந்து வருகை தந்த அருட்தந்தை  நித்திய சகாயம் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர்


ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு கடந்த  6 ஆம் திகதி திங்கள்கிழமை   மாலை  பங்குதந்தை சி வி.அன்னதாஸ் தலைமையில்  கொடியேற்றப்பட்டு தொடர்ந்து   திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை அருளுரைகளுடன் திருப்பலிகள் இடம்பெற்றது .

நேற்று  மாலை நடைபெற்ற அன்னையின் திருவுருவ பவனியும் அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் ,திருப்பலியும் இடம்பெற்றது .
ஆலய வருடாந்த  திருவிழா  கூட்டுத்திருப்பலி  இன்று காலை  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை   தலைமையில்   ஒப்புக்கொடுக்கப்படது  .

திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட ஆராதனை வழிபாடுகளை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் ஆலய திருவிழா நிறைவுபெற்றது .திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் உள்ள பங்கு அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் ,மறை மாவட்ட பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டனர்