.(லியோன்)
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழைமை வாய்ந்த கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் பங்குதந்தை சி வி.அன்னதாஸ் , அருட்தந்தை .மகிமைதாஸ் , அருட்தந்தை கிறைடன் அவுட்ஸ் கோன் , இந்தியாவில் இருந்து வருகை தந்த அருட்தந்தை நித்திய சகாயம் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர்
ஆலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு கடந்த 6 ஆம் திகதி
திங்கள்கிழமை மாலை பங்குதந்தை சி வி.அன்னதாஸ் தலைமையில் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை
அருளுரைகளுடன் திருப்பலிகள் இடம்பெற்றது .
நேற்று மாலை நடைபெற்ற அன்னையின் திருவுருவ பவனியும் அதனை தொடர்ந்து நற்கருணை
ஆராதனையும் ,திருப்பலியும் இடம்பெற்றது .
ஆலய வருடாந்த திருவிழா
கூட்டுத்திருப்பலி இன்று காலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படது .
திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட ஆராதனை
வழிபாடுகளை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் ஆலய திருவிழா நிறைவுபெற்றது .திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் உள்ள
பங்கு அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் ,மறை மாவட்ட பங்கு மக்கள் என பலர்
கலந்துகொண்டனர்