புளியந்தீவு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்…

புளியந்தீவு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம்…



மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி 02ல் அமைந்துள்ள ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த 19ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ த.சிவகுமாரக் குருக்கள் தலைமையில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பின் மத்தியின் புளியந்தீவு பிரதேசத்தில் மிகவும் பிரசித்த பெற்ற இவ்வாலய உற்சவம் ஆடித் திங்கள் 03ம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆடித் திங்கள் 12ம் நாள் தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவுபெறும்.

இவ்வுற்சவத்தின் போது திருவேட்டைத் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா போன்ற சிறப்பு உற்சவ    ங்களும் இடம்பெற்று எதிர்வரும் 28ம் திகதியன்று காலை தீர்த்தோற்சவம் நடைபெறும் அதனைத் தொடர்ந்து மாலை கொடியிறக்கத்துடன் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.