மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளின் நடைபவனி

மட்டக்களப்பில் நான்கு முனைகளில் இருந்து இன்று காலை மாற்றுத்திரனாளிகளின் நடை பவனி நடைபெற்றது.

எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வடகிழக்கில் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பரா ஒலிப்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதனை முன்னிட்டு இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருநாள் நடை என்னும் தொனிப்பொருளில் இந்த நடை பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

பயனியர் வீதி,கோவிந்தன்வீதி,தாண்டவன்வெளி,கோட்டைமுனை ஆகிய பகுதிகளில் இருந்து நான்கு பிரிவுகளாக ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு காந்திபூங்காவினை வந்தடைந்தது.

தாண்டவன்வெளியில் ஆரம்பமான பேரணியில் மட்டக்களப:பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் கே.அருள்மொழி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் இணைந்து நடாத்திய இந்த ஊர்வலத்தில் பெருமளவான மாற்றுத்திறனாளிகளும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.