புலமைப்பரிசில் பரீட்சையில் தகைமை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு


(லியோன்)

 கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில்  தகைமை பெற்ற  மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு காத்தான்குடியில் நடைபெற்றது  
.

கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எச் எல் எம் .மீரா ஷாஹிப்பு  ஏற்பாட்டில்  2017  ஆம் ஆண்டு தரம் ஐந்து  புலமைப்பரிசில் பரீட்சையில் தகமை பெற்ற  மாணவர்களை பாராட்டி கௌரவித்து அவர்களுக்கு பதக்கங்களும்  சான்றிதழ்களும்  வழங்கும் நிகழ்வு   மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை அதிபர் அல்ஹாஜ் எம் சி எம் எ .சதார் தலைமையில் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் நடைபெற்றது

கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் 14வது வருடமாக நடாத்தும் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மத்திய வலைய கல்விப்பணிப்பாளர் எ எல் எம் ஜூனையிட் ,மத்திய வலைய பணிப்பாளர் ஹரிஹரன் , மத்திய வலய பாடசாலைகளின் ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள்  ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர் .