(லியோன்)
ஜனதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பேண்தகு பாடசாலை அபிவிருத்தி செயல்
திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் தற்போது நாடளாவிய
ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படு
வருகின்றன .
இதன்கீழ் மட்டக்களப்பு
மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன
இதற்கு அமைய மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு கல்வி
வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலத்தில் போதைப்பொருள்
ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது
வித்தியாலய அதிபர் கே .முரளிதரன் தலைமையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் பெற்றார்களின் பங்களிப்புடன் விழிப்புணர்வு ஊர்வலமும் வீதி நாடகமும் நடைபெற்றது
இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி பாடசாலையின் பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கு சென்று
மீண்டும் பாடசாலையை வந்தடைந்து
இதன் போது போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும்
வகையில் பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு கலந்துகொண்டனர்
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டல் ,வலயமட்ட
போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எ .ஜெகநாதன் , பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள்
,பெற்றோர்கள் மற்றும் காந்தான்குடி பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்