புனித மிக்கேல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா



(லியோன்)


மட்டக்களப்பு  கல்வி  வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு  புனித மிக்கேல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா  கல்லூரி  அதிபர்  பயஸ் ஆனந்தராஜா தலைமையில் கல்லூரி  பிரதான மண்டபத்தில்  இடம்பெற்றது .


நடைபெற்ற கல்லூரியின் வருடாந்த  பரிசளிப்பு  விழா நிகழ்வில் மாணவர்களின் கலை பண்பாட்டு  நிகழ்வுகள்  இடம்பெற்றதுடன்  தேசிய மட்டம் மற்றும் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்களும் , சான்றிதழ்களும்  வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை ,பிரதம விருந்தினராக  தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர்  செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, மற்றும் கௌரவ அதிதிகளாக  மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர்  .கே . பாஸ்கரன்  மற்றும் நிகழ்வில் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி  அபிவிருத்தி  குழு உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள்  கலந்துகொண்டனர்