மாங்காடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய புனராவர்தன கும்பாபிஷேகம்

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு  சிறப்பு மிக்க  மாங்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்  பஞ்சகுண்ட பஷி புனராவர்தன பம்புரோஷடண அஸ்டப்தன பிரதிஷ்டா மஹா கும்பாஷேகம் இன்று 05 திகதி வியாழகிழமை காலை இடம் பெற்றது.

அந்த வகையில் நேற்றுமுன்தினம் (03.07.2018) செவ்வாய்கிழமையும் நேற்று புதன்கிழமையும்(04.07.2018) எண்ணெய்காப்பு சாத்துதல் ஆரம்பமாகியது.இதன் போது அடியார்கள் மூல மூர்த்திக்கும் பரிவார தெய்வங்களான பலிபீடம் மூர்சிகம் சிவலிங்கம்,பார்வதி,நகதம்பிரான்,முருகன்,நவக்கிரகம்,வைரவர், மாரியம்மன் ,சண்டேஸ்வரர், போன்ற பரிவார தெய்வங்களுக்கு எண்ணெய்காப்பு சாத்தினர்.
இன்று காலை பஞ்சகுண்டங்களில் யாகம் நடைபெற்று கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பிரதான விமானம்  மற்றும் பரிபாலன ஆலயங்கள் கும்பாபிசேகம் செய்யப்பட்டது.இவ் பஞ்சகுண்ட பஷி புனராவர்தக பம்புரோஷடண அஸ்டப்தன பிரதிஷ்டா மஹா கும்பாஷேகத்தினை  பிரதிஷ்ட பிரதம குரு இரா.கு.கோபாலசிங்கம் சிவாச்சாரியார்  தலைமையில்  நடைபெற்றது .இந்த கும்பாபிஷேக விசேட நிகழ்வுகளில் பெருமளவான பக்த அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்