கிழக்குமாகாண 2018 ஆண்டுக்கான விளையாட்டு பெருவிழா


(லியோன்)

கிழக்குமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண கல்வி கலாசார விளையாட்டு துறை அமைச்சின் அனுசரணையில் கிழக்குமாகாண
2018 ஆண்டுக்கான 44 வது விளையாட்டு பெருவிழா  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது


கிழக்கு மாகாணத்தின் 2018 ஆண்டுக்கான 44  விளையாட்டு பெருவிழா கிழக்குமாகாண கல்வி விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எ டப்ளியு . முத்துபண்டா தலைமையில் இரண்டு நாட்கள்  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் 25  விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது

கிழக்குமாகானத்திற்கான  விளையாட்டு பெருவிழா   நிகழ்வுகளில் அம்பாறை ,,மட்டக்களப்பு  ,திருகோணமலை , ஆகிய  மூன்று மாவட்டத்தை சேர்ந்த வீரவீரங்கனை கலந்துகொண்டனர் .

இரண்டு நாட்கள் நடைபெற்ற 2018 ஆண்டுக்கான 44 வது ,  விளையாட்டு பெருவிழா போட்டிகளில் கலந்துகொண்ட மூன்று மாவட்டங்களில் 71 தங்க பதக்கங்களையும் , 62  வெள்ளி பதக்கங்களையும் , 39  வெண்கல பதக்கங்களையும் பெற்று  முதல் இடத்தினை திருகோணமலை மாவட்டமும்  , 61  தங்க பதக்கங்களையும் , 60  வெள்ளி பதக்கங்களையும் 44  வெண்கல பதக்கங்களையும் பெற்று  இரண்டாவது  இடத்தினை  அம்பாறை  மாவட்டமும்  , 50   தங்க பதக்கங்களையும் , 37  வெள்ளி பதக்கங்களையும் , 39   வெண்கல பதக்கங்களையும் பெற்று  மூன்றாவது இடத்தினை  மட்டக்களப்பு  மாவட்டமும் பெற்றுக்கொண்டது .
71  தங்க பதக்கங்களையும் , 62  வெள்ளி பதக்கங்களையும் , 39  வெண்கல பதக்கங்களையும் பெற்று  கிழக்குமாகனத்தின் 2018 ஆண்டு 44 வது விளையாட்டு பெருவிழாவில்  திருகோணமலை மாவட்டம் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் .    

நடைபெற்ற  இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர்  எம் .உதயகுமார் மற்றும் அதிதிகளாக  மாகானவிளையாட்டுதிணைக்கள பணிப்பாளர் என் .மதிவண்ணன், மாவட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர்  வி .ஈஸ்வரன் , மாநகர பிரதி முதல்வர் கே .சத்தியசீலன் ,மாநகர சபை உறுப்பினர்கள் ,  கிழக்குமாகான விளையாட்டு துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட மூன்று மாவட்டங்களின்  விளையாட்டு துறை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்