சாதிக்குமா மட்டக்களப்பு?






தேசிய ரீதியிலான தேசிய இளைஞர் கபடிப்போட்டிகள்  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உள்ளகரங்கில் இன்று சனிக்கிழமை (09)  ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி  மிகுந்த எதிர்பார்ப்புக்களோடு மட்டக்களப்பு   ஆண்கள் அணி களம் காண்கிறது.

அந்தவகையில் முதலாவது சுற்றில் வவுணியா அணியுடன் மட்டக்களப்பு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

முற்றிலும் புதிய மற்றும் தேசிய ரீதியிலான முதல் கள அனுபவத்துடன் இளம் அணியாகவே மட்டக்களப்பு அணி களம் காண்கிறது.  அதே வேளை கடந்த 2017ம் வருடத்தில் மட்டக்களப்பு அணியே தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.