மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் நேற்று இரவு வயோதிபர் ஒருவர் இனந்தெரியாத ஆயுதாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 11.45மணியளவில் காத்தான்குடி கர்பலா வீதியில் உள்ள உணவு விடுதியிலேயே இந்த துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த உணவு விடுதியின் உரிமையாளரான ஆதம்பாவா முகமட் இஸ்மாயில் என்பவரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிசூட்டின்போது ஸ்தலத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் ரி56ரக துப்பாக்கி மூலமே குறித்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற:றும் மாவட்ட குற்றத்தடவியல் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
நேற்று இரவு 11.45மணியளவில் காத்தான்குடி கர்பலா வீதியில் உள்ள உணவு விடுதியிலேயே இந்த துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த உணவு விடுதியின் உரிமையாளரான ஆதம்பாவா முகமட் இஸ்மாயில் என்பவரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிசூட்டின்போது ஸ்தலத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் ரி56ரக துப்பாக்கி மூலமே குறித்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற:றும் மாவட்ட குற்றத்தடவியல் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.