(லியோன்)
கிழக்கு மாகான காணி நிர்வாக திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு
,அம்பாறை ,திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களின் பிரதேச செயலங்களில்
கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களான காணி குடியேற்றம் , வெளிக்கள ஆகிய மூன்று உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள்
செயலமர்வு மட்டக்களப்பு சர்வோதய
மண்டபத்தில் நடைபெற்றது
.
பொதுமக்களுக்கு நல்ல சேவை செய்யக்கூடிய அதிகாரிகள் மனப்பாங்கு ரீதியாக
மற்றம் பெறுவதற்கான வாண்மை விருத்தி மற்றும் அரச காணிகள் சட்ட ரீதியாக ஆவணங்கள்
வழங்கள் , அரச காணியினை அத்து மீறி பிடிப்பதற்கான சட்ட நடவடிக்கை தொடர்பாக
உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வாக
நடைபெற்றது
கிழக்குமாகான காணி ஆணையாளர் அனுர தர்மதாச தலைமையில் நடைபெற்ற இந்த
செயலமர்வில் கிழக்கு மாகான காணி உதவி
ஆணையாளர் கே .ரவிராஜன் , வளவாளர்களாக மட்டக்களப்பு கல்வி வலய அலுவலக தொழில்
வழிகாட்டல் உத்தியோகத்தர் எ .ஜெகநாதன் ,தேசிய நீர் முகாமைத்துவ பொறியிலாளர்
பிரங்கி பெரேரா மற்றும் மட்டக்களப்பு ,அம்பாறை ,திருகோணமலை ஆகிய மூன்று
மாவட்டங்களின் பிரதேச செயலங்களில் கடமையாற்றுகின்ற காணி உத்தியோகத்தர்கள்
கலந்துகொண்டனர் .