(லியோன்)
மட்டக்களப்பு
மறை மாவட்டத்தின் கல்லடி புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா பங்கு
தந்தை றோசான் அடிகளார் தலைமையில்
கொடியேற்றப்பட்டு திருவிழா ஆரம்பமானது ..
ஆலயத்தின்
திருவிழா திருப்பலி எதிர்வரும் 17 ஆம்
திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெறவுள்ள கூட்டுத்திருப்பலியுடன்
நிறைவுபெறவுள்ளது
இந்த விசேட கூட்டுத் திருப்பலியினை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்
பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் ஒப்புகொடுக்கப்பட்டவுள்ளது
ஆலய திருவிழா
நவநாள் காலங்களில் விசேட திருப்பலிகள் இடம்பெற்று
16ஆம் திகதி சனிக்கிழமை மாலை
புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனியும் விசேட நற்கருணை வழிபாடுகளுடன் திருப்பலி
ஒப்புகொடுக்கப்படும்
கொடியேற்றத்துடன் ஆரம்பமான அந்தோனியார் சிற்றாலய ஆலய
வருடாந்த திருவிழாவின் முதல் நவ நாள்
திருப்பலியினை “குடும்பத்தில் பிறக்கின்ற சமூக அக்கறையை “ எனும் கருப்பொருளில் மரயுறைகளை வழங்கி திருப்பலியினை அருட்தந்தை ஸ்ரானிஸ் லோஸ்
அடிகளாரினால் ஒப்புகொடுக்கப்பட்டது இந்த திருப்பலியில் கல்லடி பங்கு மக்கள் கலந்து
சிறப்பித்தனர்