மாணவிக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் அஞ்சலி


 (லியோன்)

   
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நாவக்குடா கிழக்கு  , 4 குறுக்கு வீதி  விவேகானந்த புரம் பகுதியில் உள்ள  வீடு ஒன்றில்  வாடகைக்கு  இருந்து  கல்லடி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்தில்  கல்வி பயின்ற மண்டூர்  பாடசாலை வீதி , காக்காச்சி வெட்டை பிரதேசத்தை சேர்ந்த சங்கரத்துரை பானுஜா, வயது  22  மாணவி  ஒருவரே  சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் 
.  

சடலமாக மீட்கப்பட்ட மாணவியின்  மரணம் தொடர்பான விசாரணைகளின் பின் இன்று மாலை அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது   .

இதனை தொடர்ந்து மாணவியின் உடல் கல்லடி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாணவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது .

இந்த அஞ்சலி நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் , மாணவர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள் , மதத்தலைவர்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க தமது ஆழ்ந்த அஞ்சலியினை செலுத்தினர் .

அஞ்சலி நிகழ்வினை  தொடர்ந்து மாணவியின் உடல் இறுதி கிரிகைகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது  .,