(லியோன்)
மட்டக்களப்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நாவக்குடா கிழக்கு , 4 குறுக்கு வீதி விவேகானந்த புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில்
வாடகைக்கு இருந்து கல்லடி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம்
கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மண்டூர் பாடசாலை வீதி , காக்காச்சி வெட்டை பிரதேசத்தை
சேர்ந்த சங்கரத்துரை பானுஜா, வயது 22 மாணவி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார்
தெரிவித்தனர்
.
சடலமாக மீட்கப்பட்ட மாணவியின்
மரணம் தொடர்பான விசாரணைகளின் பின் இன்று மாலை அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .
இதனை தொடர்ந்து மாணவியின் உடல் கல்லடி
விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு கொண்டு
செல்லப்பட்டு மாணவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது .
இந்த அஞ்சலி நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
, மாணவர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள் , மதத்தலைவர்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க
தமது ஆழ்ந்த அஞ்சலியினை செலுத்தினர் .
அஞ்சலி நிகழ்வினை
தொடர்ந்து மாணவியின் உடல் இறுதி கிரிகைகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .,