மட்டக்களப்பு பொலிசாரின் இன நல்லிணக்கத்திற்கான இப்தார் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தலைமையக பொறுப்பதிகாரி  தயா தீகா வதுற  தலைமையில் இன நல்லிணக்கத்திற்கான  இப்தார் நிகழ்வு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக நிலையத்தில்  நடைபெற்றது  


இன  நல்லிணக்கத்திற்காக ஏற்பாடு செய்யப்பட இப்தார் நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக கிராத் ஓதப்பட்டு தொடர்ந்து  தொழுகைக்கான அதான் சொல்லப்பட்டு நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது . 

இந்நிகழ்வில் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச் டி எ எஸ்   ஜயசேகர ,பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியு ஜெ ஜாகொட ஆராச்சி , மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம் என் எஸ் .மென்டிஸ் , மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்  ஆர் .குமாரசிறி ,கோட்டமுனை யுசிவியா பள்ளிவாசல் மௌலவி  எ ஜே  எம் .இலியாஸ் பலாகி , மட்டக்களப்பு  ஜாமி உஸ் சலாம் ஜும்மா பள்ளிவாசல் மௌலவி  எச்  எம்  ,  நியாஸ் அகமட் , இஸ்லாமிய வர்த்தக நலன்புரி அமைப்பின் தலைவர் அல் ஹாஜ் , கலீல் மாறும்  முஸ்லிம் சம்மேளனங்களின்  ,உலமாக்கள் , சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்