மாநகர சபையின் ஐந்தாவது அமர்வு ஒத்திவைப்பு


(லியோன்)

மட்டக்களப்பு மாநகர சபையின் ஐந்தாவது அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்
 
நாடளாவிய ரீதியில் அனைத்து அரச திணைக்களங்களில் கடமைபுரியும்  நிர்வாக சபை உத்தியோகத்தர்கள் இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .

இதன்காரணமாக அரச திணைக்களங்களில் நிர்வாக சபை தொடர்பான பணிகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலே நடைபெற்று வருகின்றன .

மட்டக்களப்பு மாநகர சபை நிர்வாக சபை அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பணிபகிஸ்கரிப்பின் காரணமாக இன்று நடைபெறவிருந்த ஐந்தாவது மாநகர சபையின் அமர்வு எதிர் வரும் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார் 

இதேவேளை இன்று நடைபெறவிருந்த ஐந்தாவது அமர்வின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ஆறாவது அமர்வு  நடைபெறும் என  மாநகர முதல்வர்   தெரிவித்தார்