இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது


 (லியோன்)

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா  கடந்த 01 ஆம்  வெள்ளிக்கிழமை மாலை  பங்கு தந்தை அருட்பணி  பேதுரு ஜீவராஜ்  தலைமையில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி (10)  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிழா திருப்பலியுடன்    திரு இருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா  நிறைவு பெற்றது


(09) சனிக்கிழமை மாலை ஆலயத்தில் நடைபெற்ற  திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , விசேட திருப்பலியை தொடர்ந்து  திரு இருதயநாதரின் திரு உருவம் பவனி .நடைபெற்றது .

திருவிழா திருப்பலியினை மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் பங்குதந்தை  பேதுரு ஜீவராஜ்   இணைந்து ஒப்புகொடுத்தனர்
திருவிழா திருப்பலியை  தொடர்ந்து  கொடியிறக்கத்துடன்  ஆலய வருடாந்த திருவிழா நிறைவு பெற்றது .