மங்கிகட்டில் வாகை சூடியது மூதுர் "புதுமலர்" விளையாட்டுக் கழகம்.




(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மங்கிகட்டு "கதிரவன்" விளையாட்டுக் கழகம் தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியினை 2ம் திகதி நடாத்தி இருந்தார்கள்.

இந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போது கதிரவன் விளையாட்டுக் கழகத்திற்காக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கதிரவன் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட போட்டியில்.
1ம் இடத்தினை திருகோணமலை மூதுர் "புதுமலர்" அணியினரும்.
2ம் இடத்தினை மங்கிகட்டு "கதிரவன்" அணியினரும்,
3ம் இடத்தினை திருகோணமலை "பாரதி" அணியினரும்,
4ம் இடத்தினை மட்டுநகர் திராய்மடு "சுவீஸ் லேன்" அணியினரும் பெற்றுக் கொண்டனர்.

இந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
ஞா.ஸ்ரீநேசன் அவர்களும்.
சிறப்பு அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா அவர்களும்,
அழைப்பு அதிதிகளாக
வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரீ.நசீர்,
கிராம உத்தியோகஸ்தர்,
சமுகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் போன்ற அதிதிகள் வருகை தந்திருந்தனர்.