(லியோன்)
இனம் தெரியாத ஆயுததாரிகளினால்
சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா
அடிகளாரின் 30வது ஆண்டு நிறைவு தின நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது
1987 மற்றும் 1988 ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட மதகலவரங்களின் போதும் இந்திய அமைதிகாக்கும்
படை இலங்கைக்கு வந்த போதும் இன
நல்லுறவுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மத மக்களை பாதுகாக்கும்
மனிதாபிமான செயல்பாட்டி தந்து ஆன்மீக வாழ்வினை அர்பணித்த அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளார் 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் திகதி இனம் தெரியாத
ஆயுத தாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்
சுட்டுக்கொல்லப்பட்ட சமாதானத்தின் காவலன் அருட்தந்தை சந்திரா அடிகளார் 30வது ஆண்டு நிறைவு தின விசேட திருப்பலி
மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர்
அருட்தந்தை எ .தேவதாசன் அடிகளார் தலைமையில் பங்கு தந்தை சி ,வி
,அன்னதாஸ் ,உதவி பங்கு தந்தை ஜெரிஸ்டன் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் .
திருப்பலியினை தொடர்ந்து ஆலயவளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின்
சமாதியில் விசேட நினைவு மலரஞ்சலியுடன் ,ஜெபவளிபாடுகளும் நடைபெற்றது
இந்த நினைவு அஞ்சலி விசேட நிகழ்வில் பங்கு மக்கள் ,பாடசாலை மாணவர்கள்
, பொதுநிலையினர் என பலர் கலந்துகொண்டனர்