மாவடிவேம்பில் நுண்கடனால் குடும்பஸ்தர் உயிர் இழப்பு.



மட்டக்களப்பு மாவட்ட செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு கிராமத்தில் நுண்கடன் தொல்லையால் 22வயது சந்திரமோகன் கிருபைராசா என்ற இளம் மேசன் தொழிலாளி இன்று (06) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவரது தற்கொலையால் மனைவியும், ஐந்து வயது மகனும் அனாதையாகிய துயர சம்பவம் இப் பிரதேச மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

LOLC, RDB, BRACCA போன்ற நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற இவர், மீளச்செலுத்த மற்றுமொரு நிதிநிறுவனத்தை நாடிச் செல்லவிருந்த சந்தர்ப்பத்தில், மனஉளைச்சலுக்குள்ளாகி தனது தாய் வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை  செய்துள்ளார்.

மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.