கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆளுநர் செயலகத்தை முற்றுகை.



(மண்டூர் நிருபர்) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று(06)  ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக  முற்றுகையிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின் பின்னர் வயது அடிப்படையில் குறைந்த பட்ச பட்டதாரிகளுக்கு மாத்திரம் தொழில் வாய்ப்பு வழங்கி வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் மிகுதியாக உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பினை உடனடியாக வழங்கக் கோரியே திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன் போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகம மக்கள் சந்திப்பாகிய இன்றைய நாள் அலுவலகத்தில் இல்லாத சந்தர்ப்பத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது