புன்னச்சோலை பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பம்


(லியோன்)

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான  மட்டக்களப்பு புன்னச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்   இன்று மாலை நடைபெற்ற  திருக்கதவு  திறத்தல்  வைபவத்துடன் அம்பாள் எழுந்தருளப் பண்ணலுடன்  பெருவிழா ஆரம்பமானது .


ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட அபிஷேக அலங்கார பூசைகள்  ஆலயத்தில் நடைபெறும் .ஆலய உற்சவத்தின் கல்யாணக் கால் வெட்டும் சடங்கு   எதிர் வரும் 13 ஆம் திகதி  புதன்கிழமை  மாலை இடம்பெற்று  வழமையான வீதியூடாக அம்பாள் வீதி வலம் வரும் நிகழ்வு இடம்பெறும் .

மட்டக்களப்பு புன்னச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீ மிதிப்பு வைபவம்  15   ஆம் திகதி   வெள்ளிக்கிழமை   மாலை  நடைபெற்று   தொடர்ந்து பலிகருமப் பூஜைகளுடன்  அம்பாளின் வருடாந்த  சடங்கு உற்சவம்  நிறைவுபெறும்