பல்சமய ஒன்றியத்தின் சகவாழ்வுக்கான இப்தார் நிகழ்வு


 (லியோன்)

மட்டக்களப்பு  கரித்தாஸ் எகெட் நிறுவக பல்சமய ஒன்றியம் , மட்டக்களப்பு சமாதானத்திற்கான சமயங்களின் ஒன்றியம் இணைந்து  ஏற்பாடு செய்யப்பட இப்தார் நிகழ்வும் மட்டக்களப்பு  மாநகர மண்டபத்தில் நடைபெற்றது 

மட்டக்களப்பு மாவட்டத்தில்  அனைத்து இன  மக்களின்  இன ஐக்கியத்தின் ஊடாக சகவாழ்வையும் ,நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட இப்தார் நிகழ்வில்  இடம்பெற்ற இஸ்லாமிய  மார்க்க உரையுடன் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது . 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் ,  முஸ்லிம் சம்மேளனங்களின்  ,உலமாக்கள் ,சர்வமத தலைவர்கள் ,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , மற்றும் மட்டக்களப்பு வர்த்தக  சமூக உறுப்பினர்கள் இளைஞர் ,யுவதிகள்  கலந்துகொண்டனர்