(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில்
மட்டக்களப்பு நொச்சிமுனையில் கடந்த 25 ஆண்டு
காலமாக இயங்கி வருகின்ற தரிசனம்
விழிப்புலனற்றோர் பாடசாலையின் 25 வது ஆண்டு விழாவும் வெள்ளிவிழா சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வு தரிசனம் இல்லத்தின் தலைவரும் , தேசிய பொலிஸ் ஆணைக்குழு மாகான
பணிப்பாளர் எ .ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் தரிசனம் இல்ல மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் ,சிறப்பு
மலர் வெளியீட்டு நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது .
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
திருமதி .சுதர்சனி ஸ்ரீகாந்த் , சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , கிழக்குமாகான சமூக சேவைகள்
திணைக்கள பணிப்பாளர் . எம் சி . அன்சார்
யாழ்பாணம் கல்வியியற்கல்லூரி விரிவுரையாளர் ஆர் .ரவிச்சந்திரன் ,மற்றும் நிகழ்வில்
தரிசனம் இல்ல மாணவர்கள் ,ஆசிரியர்கள்
,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்