தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் வெள்ளிவிழா மலர் வெளியீடு


(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மட்டக்களப்பு நொச்சிமுனையில் கடந்த 25 ஆண்டு காலமாக இயங்கி வருகின்ற  தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 25 வது ஆண்டு விழாவும் வெள்ளிவிழா சிறப்பு மலர் வெளியீட்டு    நிகழ்வு  தரிசனம்  இல்லத்தின்  தலைவரும் , தேசிய பொலிஸ் ஆணைக்குழு மாகான பணிப்பாளர் எ .ரவிச்சந்திரன் தலைமையில்   நடைபெற்றது .


இந்நிகழ்வில் தரிசனம் இல்ல மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் ,சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது .

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி .சுதர்சனி ஸ்ரீகாந்த் , சிறப்பு விருந்தினர்களாக  மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்  கே .பாஸ்கரன் , கிழக்குமாகான சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் . எம்  சி . அன்சார் யாழ்பாணம் கல்வியியற்கல்லூரி விரிவுரையாளர் ஆர் .ரவிச்சந்திரன் ,மற்றும் நிகழ்வில் தரிசனம்  இல்ல மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்