மாநகர சபையின் வினைத்திறன் செயற்பாட்டை அதிகரித்தல் தொடர்பில் கலந்துரையாடல்


(லியோன்)

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபையின் வினைத்திறன் மிக்க செயற்பாட்டை அதிகரித்தல் தொடர்பில்  மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும்  மாநகரசபை உத்தியோகத்தர்களுக்கிடையில் கலந்துரையாடல் இன்று  மாநகரசபை மண்டபத்தில்  நடைபெற்றது  


 மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு மாநகரை  முதன்மை மாநகராக்கும் செயற்திட்டத்திற்கான வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில்   மாநகர  சபை உறுப்பினர்கள்   மற்றும் உத்தியோகத்தர்களினால் ஆக்கபூர்வமான பல ஆலோசனைகளும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு  கலந்துரையாடப்பட்டன

இந்த கலந்துரையாடல் நிகழ்வில்  மாநகர  பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,  மாநகர சபை பொறியிளாளர், பிரதம கணக்காளர் ,மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள்கலந்துகொண்டனர்.