கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பில் ஆராயும் கூட்டம்


 (லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கால்நடை பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கால்நடை பண்ணையாளர்களின் சங்கங்களின்  பிரதிநிதிகளுடன் பிரச்சினைகளை ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் எம் . உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பண்ணையாளர்களின்  கால்நடைகளின் பால் உற்பத்திகளின் விற்பனை , கால்நடைகளுக்கான மேச்சல் தரை ,கால்நடைகளுக்கான சுகாதாரம் போன்ற பல விடயங்கள் பண்ணையாலர்களினால் முன்வைக்கப்பட்டு இதற்கான தீர்வுகள் இன்று ஆராயப்பட்டது .

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட கால்நடை உற்பத்தி ,சுகாதார திணைக்கள பணிப்பாளர் இக்பால் , மாவட்ட  கால்நடை வைத்திய அதிகாரி திருமதி . குகேந்திரன் , மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரிகள் ,மாவட்ட செயலக கால்நடை திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட கால்நடை சங்க பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர்