மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாயிலை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது


(லியோன்)


 விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைய மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் ஆற்றுவாயிலை  தோண்டும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்டது


மட்டக்களப்பு மாவட்டத்தின் பன்குடாவெளி , செங்கலடி நேரக்குடா , செங்கலடி நைனாவளி , வெள்ளக்காடு , கரவெட்டி கண்டம் ,இலுப்படிச்சேனை ,கன்னித்தீவு ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆற்றை அண்டிய விவசாயிகளின் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .

இதன் காரணமாக  தமது அறுவடை பயிர்களை அறுவடை செய்வதற்கு முடியாத நிலையில் ஆற்று நீர் வழிந்தோடுகின்ற காரணத்தினால்  மிக சிரமத்தின் மத்தியில் அறுவடை பயிர்களை அறுவடை செய்வதாக தெரிவிக்கும் விவசாயிகள்  இது தொடர்பாக  பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர் ஆகியோருக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் ஆற்றுவாயிலை வெட்டுவதற்கான நடவடிக்கையினை இன்று முன்னெடுக்கப்பட்டது .

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் பெக்கோ இயந்திரம் கொண்டு  தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது 

இதனை  பார்வைவையிடுவதற்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  திருமதி .சுதர்சனி சிறிகாந்த் , மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ஞா .,ஸ்ரீநேசன் , தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர்  செய்யித் அலி ஸாஹிர் மௌலானா , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  கே .குணநாதன் , வீதி அபிவிருத்தி அதிகார சபையின்  மாகாணப்பணிப்பாளர்  வை . தர்மரட்ணம், வீதி அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட  பிரதம பொறியிலாளர்  டி . பத்மராஜா , மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்  மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் , மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் ,விவசாயிகள் ஆகியோர்  பார்வையிட்டனர்