இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் பதில் தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்


(லியோன்)

மட்டக்களப்பு விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய பதில் தூதுவர் அறின்டோம் பட்ஜி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின்  அபிவிருத்தி செயல்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டார்


இதன் போது இந்திய அரசினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ள திட்டங்களான வீடமைப்பு ,சுகாதாரம் ,வீதி , கல்வி , நீர்பாசனம் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது .

நடைபெற்ற கலந்துரையாடலில் இந்திய உயர்ஸ்தானிகரின் இலங்கைக்கான சுகாதார அபிவிருத்தி நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் டி சி . மஞ்சுநாத் ,மற்றும்  மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் நெடுஞ்செழியன் ,மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் , மட்டக்களப்பு கல்வி திணைக்கள அதிகாரிகள் , பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் , வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் , நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்