இந்து பண்பாட்டு நிதியம், இந்து சபைய கலாசார அலுவல்கள் திணைக்களம்
மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில்
இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை
உணர்த்தும் முகமாக மே மாதம் 31ஆம்
திகதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது
இளம் இந்து சிறார்களின் இதயங்களில் உள்ள தெய்வீக தன்மையை மலர செய்து
அவர்களின் ஆளுமையும் ,திறமைகளும் மலர்ந்து விரிவடைய பயிற்சியளித்து ,வாழிகாட்டி
ஒழுக்க நெறிமுறை சார்ந்த சமூகத்தை உருவாக்குதனே அறநெறி கல்வியின் இலட்சியமாகும்.
இதனை மக்கள் மத்தியிலும்
குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அறநெறி
பாடசாலைக்கு பிள்ளைகள் செல்வதனை ஊக்கப்படுத்தல் வேண்டிய அவசியத்தை தெளிவு படுத்தம் முகமாக மே மாதம் 31ஆம்
திகதி முதல் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை தேசிய இந்து சமய அறநெறி கல்வி விழிப்புணர்வு
மாதமாக இந்து சமைய
கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும்
இந்துமத அலுவல்கள் அமைச்சினால் அனுஷ்டிக்கப்படுகின்றது
இந்நிகழ்வினை மட்டக்களப்பு
மாவட்டத்தில் அனுஷ்டிக்கும் வகையில் மாவட்ட செயலக கலாசார திணைக்களத்தின்
ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் தேசிய இந்து சமய
அறநெறி கல்வி விழிப்புணர்வு நிகழ்வும் , இந்து சமய அறநெறி கல்வி கொடி தின நிகழ்வும்
இன்று பிற்பகல் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் ஆராம்பித்து வைக்கப்பட்டது .