மட்டக்களப்பு
கல்லடித்தெரு –பாஞ்சாலிபுரம்
அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய புனராவர்த்தன
பெருஞ்சாந்திப் பெருவிழா விஞ்ஞாபன நிகழ்வுகள்
22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி இன்று திங்கள்கிழமை
பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக
விஞ்ஞாபன மிக சிறப்பாக நடைபெற்றது
கிழக்கிலங்கையின் மட்டு-
நகரில் சிறப்பு மிக்க மட்டக்களப்பு
புளியந்தீவு – கல்லடித்தெரு –பாஞ்சாலிபுரம் அருள்மிகு
ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலய புனராவர்த்தன குண்ட அஷ்டபந்தன பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக குடமுழுக்கு
பெருஞ்சாந்திப் பெருவிழா விஞ்ஞாபன நிகழ்வுகள்
பிரதிஷ்ட பிரதம குரு ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ இரா .கு . அருளானந்தக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது
கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ சரவணபானந்த சர்மா தலைமையில் பூர்வாங்க கிரிகைகள் விக்கிரகங்களுக்கு எண்ணெய் மற்றும் பால்க்காப்பு சாத்தும்
நிகழ்வுகள் இடம்பெற்று ஆலய பரிவார
விக்கிரங்களின் பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன நிகழ்வுகள்
இன்று காலை சுபவேளையில் புண்ணிய
,யாக பூசை பூரணாகுதி விசேட தீபாராதனை மற்றும்
கும்ப உத்தாபனம் ஸ்தூபி அபிஷேகம்
இடம்பெற்று பரிவார
விக்கிரகங்களுக்கு பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன நிகழ்வுகள் பிரதிஷ்ட பிரதம குரு ஈசான
சிவாச்சாரியார் சிவஸ்ரீ இரா .கு .
அருளானந்தக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது ..
மட்டக்களப்பின் பல பகுதிகளின்
இருந்து பக்த அடியார்கள் ஆலயத்திற்கு வருகைதந்து நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்