(லியோன்)
மட்டக்களப்பு தபால் தொழில் சங்க ஒன்றியத்தின்
ஏற்பாட்டில் தொழில் சங்க கவனயீர்ப்பு போராட்டம்
இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது
இலங்கை ஒன்றிணைந்த தபால் தொழில்சங்க முன்னணி ஏற்பாட்டில் அனைத்து தபால் தொழில் சங்க ஒன்றியங்களினால் தபால்
ஊழியர்களின் உரிமைக்கான பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11ஆம்
திகதி மாலை 04.00 மணிமுதல்
முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்தநிலையில் தமது தொழில் சங்க போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் அனைத்து தபால் தொழில் சங்க ஒன்றியங்களை ஒன்றிணைத்து கவனயீர்ப்பு
போராட்டத்தினை இன்று மட்டக்களப்பு மாவட்ட
தபால் தலைமை காரியாலயம் முன்பாக
முன்னெடுத்தனர்