சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவி


(லியோன்)
மட்டக்களப்பு  நாவக்குடா  பகுதியல்
உள்ள வீடொன்றில் இருந்து   தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 
.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நாவக்குடா கிழக்கு , 4 குறுக்கு வீதி  விவேகானந்த புரம் பகுதியில் உள்ள  வீடு  ஒன்றில் வாடகைக்கு இருந்த  கிழக்கு பல்கலைக்கழகம்  கல்லடி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் கல்வி பயின்ற  மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்  .  

குறித்த மாணவி வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   மண்டூர்  பாடசாலை வீதி , காக்காச்சி வெட்டை பிரதேசத்தை சேர்ந்த சங்கரத்துரை பானுஜா, வயது 22  மாணவி கிழக்கு பல்கலைக்கழகம்  மட்டக்களப்பு  
கல்லடி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் கட்புலன் திறன் நுட்ப துறையில் இரண்டாம் வருட மாணவியாக கல்வி பயின்று வருகின்ற நிலையில் இவர்  மட்டக்களப்பு நாவக்குடா கிழக்கு விவேகானந்த புரம் பகுதியில் வாடகைக்கு இருந்த வீட்டின் அறையில் துக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் . 

சடலமாக மீட்கப்பட்ட மாணவியின்  மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பொலிஸ் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய  பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு  
வருகின்ற நிலையில்  இவரது மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணையின் பின் மாணவியின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது