மண்முனை மேற்கில் இலத்திரனியல் நூலகம் திறந்துவைப்பு.




மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு புதுமண்டபத்தடி கிராமத்தில்  இலத்திரனியல் நூலகம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஒழுங்கமைப்பில்,புது மண்டபத்தடி சண்முகா இளைஞர்கழக தலைவர் செல்வன் ரி, வேணுராஜ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் புதுமண்டபத்தடி சண்முகா இளைஞர் கழக நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி நிசாந்தி அருள்மொழி,   புதுமண்டபத்தடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை  அதிபர்   அ.போசராசா,  புது மண்டபத்தடி கிராமசேவகர் க.கிருஷ்ணப்பிள்ளை,
 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்  சு.வசந்தகுமார் ,  தாண்டியடி விளையாட்டு கழக    தலைவர் வை. லோகேஸ்வரன்,  இளைஞர்பாராளுமன்ற உறுப்பினர் அ .தர்ஷிக்கா, மண்முனை மேற்கு பிரதேச இளைஞர்கழக சம்மேளனங்களின்  தலைவர் செல்வன்  த.விமல்ராஷ் ஆகியோர் நூலகம் மக்களுக்கு கையளிக்கும் ஆரம்ப நிகழ்வில்
அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார தெற்கு அபிவிருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடு பூராகவும் முன்னெடுத்து வரும் 35 இலத்திரணியல் நூலகம் அமைத்தல் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தினால்  இந் நூலகம் கையளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.