“ உன்னை நீ அறி “ சிறுவர் துஸ்பிரயோக விழிப்புணர்வு வீதிநாடகம்


 (லியோன்)

மட்டக்களப்பு லியோ கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட நம்பிக்கையின் ஏணி நிறுவனத்தின் அனுசரணையில் “ உன்னை நீ அறி “ எனும் தலைப்பின் கீழ் சிறுவர் துஸ்பிரயோக விழிப்புணர்வு  வீதிநாடகம் மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு லியோ கழகம் மற்றும் நம்பிக்கையின் ஏணி நிறுவனம்  மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு , சமூக அபிவிருத்தி , மாணவர்களுக்கான கல்வி அபிவிருத்தி போன்ற  பல சமூக பணிகளையும் ,சமூகங்களுக்கிடையில் விழிப்புணர்வு நிகழ்வுகளை, முன்னெடுத்து வருகின்றன .

இதன் கீழ் சிறுவர்களுக்கு எதிரானா பாலியல் துஸ்பிரயோகங்கள் , பாலியல் வன்முறைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் வீதிநாடகம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்றது .

நடைபெற்ற விழிப்புணர்வு  வீதி நாடக நிகழ்வில் லியோ கழக உறுப்பினர்கள் , நம்பிக்கையின் ஏணி நிறுவன உத்தியோகத்தர்கள் ,பாடசாலை மாணவர்கள் ,இளைஞர் ,யுவதிகள்  கலந்துகொண்டனர்