வாகரையில் இராணுவ வீரரின் சடலம் துப்பாக்கிசூட்டு காயங்களுடன் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணியில் உள்ள படை முகாம் ஒன்றில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிசூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பனிச்சங்கேணி படை முகாமில் கடமையாற்றிய இராணுவவீரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலைசெய்துகொண்டிருக்கலாம் என தெரிவித்த வாகரை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.