மாமாங்கம் – இருதயபுரம் பிரதான வீதிக்கு குறுக்கே செல்லும் புகையிரத கடவை பாதுகாப்பற்ற நிலையில் - மக்கள் விசனம்


(லியோன்)

மட்டக்களப்பு மாமாங்கம் இருதயபுரம் பிரதான வீதிக்கு குறுக்கே செல்லும் புகையிரத கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதனால அவ்வீதி ஊடாக செல்லும் பயணிகள் பெரும் அச்சத்தின்  மத்தியில் பயணிப்பதாக தெரிவிக்கின்றனர்


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு மாமாங்கம் – இருதயபுரம் பிரதான வீதிக்கு குறுக்கே செல்லும் மட்டக்களப்பு கொழும்புக்கான பிரதான புகையிரத பாதையின் உள்ள பிரதான புகையிரத கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதனால் இந்த  புகையிரத கடவை ஊடாக மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பயணிகள் பெரும் அச்சத்தில் மத்தியில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர் .

நாளாந்தம் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் இந்த பிரதான வீதியில் உள்ள புகையிரத கடவைக்கான பாதுகாப்பு வேலி (பெரியல்)  திருத்தப்படாமல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .

அண்மையில் குறித்த புகையிரத கடவை பகுதியில்  வாய் பேசமுடியாத இளைஞன் ஒருவர்  ரெயிலில் மோதுண்டு  உயிரிழந்துள்ளார் .

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான உடன் நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள்  வேண்டுகோள் விடுக்கின்றனர்