விளாவட்டவானில் "பப்பிரவாகு" வடமோடி கூத்தின் சதங்கை அணி விழா




(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் புதிய மற்றும் பழய கூத்துக் கலைஞர்கள் இணைந்து "பப்பிரவாகு"வடமோடி கூத்தினை பழகி இன்றைய தினம்(29/05/2018) சதங்கை அணி விழாவினை மிக சிறப்பான முறையில்  நடாத்தியிருந்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சில கிராமங்களில் இடைவிடாது ஒவ்வொரு வருடமும் புதிய கூத்துக்களை பழகி அரங்கேற்றி வருகின்றார்கள். அத்த கிராமங்களில் விளாவட்டவான் கிராமமும் ஒன்றாகும்.

இந்த "பப்பிரவாகு " வடமோடி கூத்தின் அரங்கேற்றம் எதிர்வரும் 1ம் திகதி விளாவட்டவான் ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் இரண்டாம் நாள் இரவினை சிறப்பிப்பதற்காக அரங்கேற இருக்கின்றது.

இத்த கூத்தின் அண்ணாவியாராக மா.ஞானசெல்வம் அவர்களும்.
கொப்பி ஆசிரியராக சி.நிமலன் அவர்களும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.