சிறைச்சாலை கைதிகளுக்கான விசேட மருத்துவ முகாம்


(லியோன்)
மட்டக்களப்பு  சிறைச்சாலை சிறைக் கைதிகளின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறைக்கைதிகளுக்கான  மருத்துவ முகாம் இன்று மட்டக்களப்பில்   நடைபெற்றது .


அரச அதிகாரிகள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளினால் பல  சமூக பணிகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

இதற்கு அமைவாக  மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் பிரதம  ஜெயிலர்  என் .பிரபாகரன் ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை கைதிகளுக்கான விசேட மருத்துவ முகாம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர்  தலைமையில்  இன்று  நடைபெற்றது

நடைபெற்ற மருத்துவ முகாமில்  மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக் கைதிகளின்நலன்புரிச் சங்க செயலாளர் .  வி இ .தர்ஷன் , சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்களான , பி .சுசிதரன் .  எல் . ஜெயசுதாகரன் .  பி. ஜி . டேவிட் ,   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  மகபேற்று நிபுணர் வைத்தியர் கே இ .கருணாகரன் ,  வைத்தியர்  கே .லோஹாசினி ,வைத்தியர் எ பி . அப்துல் மஜீடா , வைத்தியர் திருமதி . அலீமா ரஹமான் மற்றும் சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,  சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் , தாதிய உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர் .