புன்னச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தீ மிதிப்பு வைபவம் எதிர்வரும் 15 ஆம் திகதி


 (லியோன்)

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான  மட்டக்களப்பு புன்னச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த
சடங்கு உற்சவம்   எதிர்வரும் 10 ஆம் திகதி   ஞாயிற்றுக்கிழமை மாலை  திருக்கதவு  திறத்தல்  வைபவத்துடன் அம்பாள் எழுந்தருளப் பண்ணலுடன்  பெருவிழா ஆரம்பமாகி எதிர்வரும்  15.06.2018 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  தீ மிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெறும்
 

ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட அபிஷேக அலங்கார பூசைகள்  ஆலயத்தில் நடைபெறும் .

ஆலய உற்சவத்தின் கல்யாணக் கால் வெட்டும் சடங்கு   13.06.2018  புதன்கிழமை மாலை இடம்பெற்று  வழமையான வீதியூடாக அம்பாள் வீதி வலம் வரும் நிகழ்வு இடம்பெறும் .

15 .06.2018 ஆம் திகதி   வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு வைபவம் நடைபெற்று   தொடர்ந்து பலிகருமப் பூஜைகளுடன்  அம்பாளின் வருடாந்த  சடங்கு உற்சவம் இனிதே நிறைவுபெறும்