தேசிய ரீதியில் நடைபெறவுள்ள கிறிக்கட் சுற்றுப்போட்டிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்த கோட்டைமுனை இளைஞர் கழகம் தகுதி.



நேற்று 2018.05.27ம் திகதி  மட்/சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 30வது இளைஞர் கிரிக்கட் சுற்றுப்போட்டியில்  மண்முனை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த கோட்டமுனை இளைஞர் கழகம் வெற்றி பெற்று எதிர்வரும் 2018.07.06,07,08 ம் திகதிகளில் மாத்தளையில் நடைபெற இருக்கும் தேசிய மட்ட இளைஞர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளது.

இறுதிப் போட்டியில் மண்முனைப் பற்று அணியுடன் பலப்ரீட்சை நடாத்தி அந்த அணியை வீழ்த்தி கோட்டமுனை இளைஞர் கழக அணி இந்த வாய்ப்பை பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் பன்னிரண்டு அணிகள் இந்த தொடரில் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.








அதே போன்று  மட்டக்களப்பு மாவட்ட  அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மகளீர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியிலும் கோட்டமுனை மகளீர் அணி  இறுதிப் போட்டியில் மண்முனை தென் மேற்கு அணியை  வெற்றிகொண்டு தேசிய ரீதியில் நடைபெறவுள்ள தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.