மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட இளைஞர் கழக அங்கத்தவர்களான பதினான்கு (14) இளைஞர் யுவதிகளுக்கு ஊடகத்துறைசார் இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு நாவலடி சன்றைஸ் விடுதியில் வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் (VDO) ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
இந்த பயிற்சி செயலமர்வானது கடந்த 24,25.05.2018 (வியாழன் வெள்ளி) ஆகிய இரு தினங்களில்
வதிவிடமாக நடைபெற்றது .
பயிற்சி செயலமர்வில் ஊடகத்துறைசார் அறிமுகம், செய்திசேகரிப்பு, செய்தி அறிக்கையிடல், புகைப்படம் எடுத்தல் போன்ற துறைசார் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.