(லியோன்)
மட்டக்களப்பு நகரில்
சிறப்பு மிக்க ஆலயமாக விளங்கும் எல்லை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சிந்தாமணிபிள்ளையார் ஆலயத்தின்
கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேக பூஜை நிகழ்வுகள் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது .
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சி .கு .லவகுமார சர்மா குருக்களின் தலைமையில் இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் விசேட யாக பூசை
மற்றும் விசேட
அபிசேகம் பூஜைகள் நடைபெற்று பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு
மூல மூர்த்தியாகிய விநாயகருக்கு அபிசேகம்
செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆலயத்தின் விசேட 108 சங்காபிஷேக பூஜை நிகழ்வுகள்
அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் சிறப்பாக நடைபெற்றது