மண்முனை மேற்கில் பாரிய வெள்ளப்பெருக்கு நேரில் சென்று பார்வையிட்டார் தவிசாளர்.



(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது.

பாதிப்புக்குள்ளான வீதிகளை நேரில் சென்று  மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா பார்வையிட்டார்.

மகிழவட்டவான் பிரதான வீதி,
ஆயித்தியமலை பிரதான வீதி போன்றவை நீரினால் மூழ்கியுள்ளது.

இந்த வெள்ளப் பெருக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பயிர்களும்  பாதிப்புக்குள்ளாகியுள்ளது.