கெபிடல் கற்கை நெறி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு கெபிடல் நிறுவனத்தில் கற்கை நெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது
.
மட்டக்களப்பில் கல்விச் சேவைக்காக  சிறந்த தனியார் கல்வி வழங்குனர்  என்னும் நாமத்தை பெற்றுக்கொள்ளப்பட்ட கெபிடல்  நிறுவனத்தில்  பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கெபிடல்  நிறுவன பணிப்பாளர் தியாகரன் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில்  பிரதம விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன், நாவக்குடா சின்ன லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை  மெருசன் என்றிக் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர் .

இந்நிகழ்வில் கெபிடல் கற்கை நிறுவனத்தின் ஆசிரியர்கள்  மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்