கிழக்குமாகாண பொலிஸ் திணைக்களத்தின் மெய்வல்லுனர் விளையாட்டு விழா


(லியோன்)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின்
81 வது ஆண்டு மெய்வல்லுனர் விளையாட்டு விழா நாடளாவிய ரீதியில் பொலிஸ் திணைக்களங்களின் ஏற்பாட்டில்  நடைபெற்று வருகின்றது.


கிழக்கு மாகாணத்தின் 2018 ஆண்டுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு விழா கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்  எச் .டி .கே .எஸ் கபில  ஜயசேகர தலைமையில் இரண்டு நாட்கள்  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது

கிழக்குமாகானத்திற்கான  மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் அம்பாறை ,,மட்டக்களப்பு  ,திருகோணமலை , கந்தளாய் ஆகிய பொலிஸ் பிரிவின்   பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .

2018 ஆண்டுக்கான 81 வது ஆண்டு , மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் முதல் இடத்திற்கான வெற்றி கிண்ணத்தை  அம்பாறை  
பொலிஸ் பிரிவும் ,இரண்டாவது இடத்திற்கான வெற்றி கிண்ணத்தை திருகோணமலை பொலிஸ் பிரிவும்,  பெற்று 2018 ஆண்டுக்கான கிழக்குமாகானத்திற்கான   வெற்றி கிண்ணங்களை சுவிகரித்துகொண்டனர் 

இடபெற்ற இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு ,அம்பாறை .திருகோணமலை ,மட்டக்களப்பு ஆகிய பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் அத்தியட்சகர்கள் ,பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்