"விளாவூர் யுத்தம்" 29வது போட்டியை அதிதிகள் ஆரம்பித்து வைத்தனர்



(S.t)

மட்டக்களப்பு - விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 48வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு "விளாவூர் யுத்தம் " எனும் தொனிப்பொருளில் நடாத்திக்கொன்டிருக்கும் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இரண்டு நாட்கள் நிறைவடைந்திருக்கின்றது. இதுவரை 30 போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றது
நாளைய தினம் 9 போட்டிகள் நடைபெற இருக்கின்றது.

இன்று நடைபெற்ற விளாவூர் யுத்தம் 29வது போட்டியினை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்,
மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ. சண்முகராஜா ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.