தொழிநுற்ப கல்விதொடாபான விழிப்புணர்வு கருத்தரங்கு

(படுவான் எஸ்.நவா)

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினதும் கலாச்சார மத்திய நிலையத்தினதும் மேற்பார்வையில் கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் ஒழுங்கமைத்தலின் நடாத்தப்பட்ட மூன்றாம் நிலைக்கல்வி மாணவர்களுக்கு தொழில்கல்வி  ஆணைக்கழுவினால் தொழிநுற்ப கல்வி தொடாபான விழிப்புணர்வு கருத்தரங்கு (24) போரதீவுப்பற்று பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் ரீ.துஷ்யந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது மூன்றாம் நிலைக்கல்வி தொழில்கல்வி ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் ஆர்.மதன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் உதவிப்பணிப்பாளர் எஸ்.தணிகசீலன் போரதீவுப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆர்.தேவரூபன் விவேகானந்தா தொழிநுற்பக் கல்லுரியின் முகாமைத்துவப்பணிப்பாளர் கே.பிரதீஸ்வரன் பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.திவாகரன் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்